ஜூலை 28ம் திகதி என் ப்லாக்`கின் (இதெல்லாம் ஒரு ப்லாக்`ஆ) முதலாவது பிறந்த நாள். எனவே, என்ன பண்ணலாம்`னு யோசிச்சுடு இருந்தப்போ, (ப்லாக்`அ இழுத்து மூடிடு. பிறந்த நாளுல சமூக சேவை செய்ததாகிடும்) நன்பர் ரியாஸ் "எங்க ஊரு நல்ல ஊரு" தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறார். நாம ஊருக்காக இதுவர எதுவுமே செஞ்சதில்ல... (இதுக்கு பிறகும் செய்ய போறதில்ல...) இந்தப் பதிவையாலும் எழுதழாம்னு........(ஆமா... இதுதானே நோகாம நோம்பு கும்புடுர வேலை)
எங்க ஊரு பேரு "நிககொள்ள (Nikagolla)" (வாய்ல நுலையலனா விட்ருங்க..அதுக்காக வாழைப்பழம்`னு பெயர் வைக்க முடியாது..) இது இலங்கையின் மத்திய மலை நாட்டில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். எமது மாவட்டத்தில் மிகப் பழைய ஊர்களில் ஒன்றும் கூட. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட ஒரு சமவெளி என்று கூட சொல்லலாம். ஊரின் குறுக்கே ஒரு சிறிய ஆறும் ஓடுகின்றது. (ஆத்துல தண்ணி ஓடுதா`னு கேட்டா எனக்கு கெட்ட கோவம் வரும்????)
எனது வீட்டின் முற்புற தோற்றம் |
பொன் மாலை பொழுது |
கிட்டத்தட்ட 600 குடும்பங்கள் இருக்கலாம். இதில் 100% தமிழ் பேசும் முஸ்லீம்களே வசிக்கிறோம். இருந்தாலும் சுற்றிலும் தேயிலை, மற்றும் இரப்பர் தோட்டங்களில் வசிக்கும் இந்திய பழங்குடி தமிழ் பேசும் ஹிந்துக்களும் உள்ளனர்.
வயல் வெளி |
தக்காளி (பொது அறிவு வளர்ச்சிக்காக...) |
மக்களில் அதிகமானோர் வெளி மாவட்டங்களில் தொழில் செய்பவர்களே. ஊரில் உள்ள அனைவைரையும் பெருநாள் தினங்களிலேயே பார்க்க முடியும். இது போக சிறு கைத்தொழில்களும், கால் நடை வளர்ப்பு போன்றவையும் உண்டு.
50 வயதையும் தாண்டிய மாவட்டத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்ற, உயர் தரம் வரை படிக்கக் கூடிய வசதியுடன் மின்ஹாஜ் மஹா வித்தியாலயம் எனும் பெயருடைய பாடசாலையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பாடசாலை மட்டத்தில் நடக்கும் முக்கிய போட்டிகளில் நம்ம ஊர் பாடசாலை பெயரை கேட்டாலே அடுத்த பாடசாலைகளுக்கு பேஸ்மண்ட் வீக்காயிடும். அவ்வளவு திறமையான மாணவ, மாணவிகளை கொண்ட பாடசாலையாகும்.
காலை வேளை (ஊர் சார்ந்த பகுதி) |
ஒவ்வொருவரும் அந்த ஊர்களில் பிறந்த பெரியவர்களை பற்றி எழுதி இருக்கின்றனர். எனக்கும் எழுதும் ஆசை இருந்தாலும், என் ஊரில் எந்தப் பெரியவருமே பிறந்ததில்லை என்பதும் எல்லாம் குழந்தைகளாகவே பிறக்கின்றனர் என்பதும் முக்கிய விடயமாகும். (விடுப்பா.. விடுப்பா... மனிதன்னு பொறந்தா மண்டைய போடுரதும் பதிவுனு வந்துட்டா மொக்கைய போட்ரதும் சகஜமப்பா...)
மக்களில் அனேகமானோர் நடுத்தர வர்க்கத்தினரே வாழ்கின்றனர். திருமண பந்தங்கலை பொறுத்தவரை ஊருக்குள் கலப்புத் திருமணங்கள் அரிதாகவே நடக்கின்றன. அனேகமானோர் ஊரை அண்டிய வெளியூர்களிலும் சிலர் தூர ஊர்களில் திருமணம் செய்துள்ளனர்.
விளையாட்டை பொறுத்த வரை இளைஞர்களில் ஒரே தெரிவு கிரிக்கட்`ஆகவே இருக்குறது. சில காலங்களில் உதைப் பந்தாட்டமும் விளையாடப்படும்.
இன்னும் ஊரைப் பற்றி நிறைய சொல்ல முடியுமாக இருந்தாலும் பதிவின் நீளம் எண்ணி இத்தோடு முடிக்கிறேன்.